சிந்தனை செய் மனமே

Tuesday, November 20, 2018

உதவி கேட்டலின் மகத்துவம் - Ask to Offer



When you are BRAVE to ask others for genuine help no matter what the outcome is, including few humiliating, few offering, few disrespecting,
it is that bravery that awakens the hidden kindness in yourself
And that is when,
You decide to help others in need once you get back up at any cost, and you will make it for sure !!!
Only the strongest/bravest can be kind.

எப்படி, ஏன், எதற்கு, என்ன, எத்தனை, யாரிடம், யார், எங்கு -- கேள்வி வாக்கியங்கள் எல்லாம் மற்றவரை சார்ந்து, மற்றவர்களோடு சேர்ந்து வாழும் சமுதாய வாழ்க்கைக்காகவே...

நீங்கள் உதவி கேட்பதையோ, பெறுவதையோ தயக்கமாகவும், சங்கடமாகவும் எண்ணினால், எப்படி அதே உதவி தேவைப்படும் இன்னொருவருக்கு உதவ முடியும்?

ஒருத்தருக்கொருத்தர் உதவி செய்து வாழ்வதே சமுதாய வாழ்க்கை...
தனிமரம் தோப்பாகாது என்ற பழமொழி தாவரங்களுக்கு மட்டுமல்ல நமக்கும் தான்...

உங்களுக்குத் தேவைப்படும் உதவியை கேட்க ஆரம்பிக்கும் தருணமே உங்கள் வாழ்க்கைக்கான நல்ல நேரத்தின் துவக்கம்.

இராசி பலனில் உங்கள் ராசிக்கு சொல்வது அல்ல....

கேலி செய்வோர், கண்டு கொள்ளாமல் போவோர், மறுத்து விடுவோர், மறந்து விடுவோர், ஏமாற்றி விடுவோர், உண்மையிலே உதவி செய்வோர், உதவி செய்யும் எண்ணம் இருந்தும் செய்ய முடியாத சூழல் உள்ளோர், வார்த்தைகளால் வழி காட்டுவோர், உதவி செய்யக்கூடியவரை அடையாளம் காட்டுவோர்.... என பல வகைப் பட்ட மனிதர்களின் குணங்களை தெரிந்து கொள்வீர்கள்...

ஏன் இதெல்லாம் தெரிந்து கொள்வதால் என்ன பலன்?

நீங்கள் எப்படி பட்டவராக வேண்டும் என்பதை உணர்வீர்கள்...இத்தனை குணாதிசயங்களும் நிரம்பி வழியும் இச்சமுதாயத்தில் தான் வாழப் போகிறோம்...




No comments:

Post a Comment

Poems from Tamil Literature: திருக்குறள் - பற்றற்றெம் என்பர்

Poems from Tamil Literature: திருக்குறள் - பற்றற்றெம் என்பர் : திருக்குறள் - பற்றற்றெம் என்பர் செல்வத்தை ஈட்டுவது, சேமிப்பது, செலவழிப்பது என...